கடலுாரில் தி.மு.க., ரத்த தான முகாம்
கடலுார்; தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலுார் முதுநகரில் ரத்த தான முகாம் நடந்தது.மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, மேயர் சுந்தரி ராஜா, பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் முகாமை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சங்கீதா செந்தில்முருகன், விஜயலட்சுமி செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, முதுநகரில் புதிதாக திறக்கப்பட உள்ள கருணாநிதி நுாலகம் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.