உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலி

காட்டுமன்னார்கோவில்; மானியம் ஆடூரில் கருங்கல் ஜல்லி ஏற்றிச்சென்ற லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்.காட்டுமன்னார்கோவில் அடுத்த மானியம் ஆடூரை சேர்ந்தவர் அப்துல் அலிம், 64; நேற்று முன்தினம் அப்துல் அலிம் தனது வீட்டு வாசல் அருகே நின்றார். அப்போது மானியம் ஆடூருக்கு தார் சாலை பணிக்கு கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த லாரி அப்துல் அலிம் மீது மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி முதியவர் உடல் நசுங்கி இறந்தார். புத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி