ரயிலில் சிக்கி விவசாயி பலி
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே வயலுக்கு சென்ற விவசாயி, பாசஞ்சர் ரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 75; காது கோளாதவர். இவர் நேற்று காலை 8:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு செல்ல விழுப்புரம் - திருச்சி ரயில்பாதையை கடக்க முயன்றார். அப்போது, கடலுாரில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார், இறந்தவரின் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.