கடலுாரில் 2வது நாளாக கொடிக்கம்பங்கள் அகற்றம்
கடலுார் : நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2வது நாளாக கடலுார் மாநகராட்சி பகுதி சாலைகளில் இருந்த 77 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக்கம்பங்கள் இருப்பதை அகற்றுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கடலுார் மாநகரில் 2வது நாளாக கம்மியம்பேட்டை, போடிச்செட்டித்தெரு, சங்கரநாயுடு தெரு, கூத்தப்பாக்கம், அரிசிபெரியாங்குப்பம், கே.என்.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் இருந்த 77 கொடிக்கம்பங்களை உதவி பொறியாளர் மணிவேல் முன்னிலையில் அகற்றப்பட்டன. மீதமுள்ள கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி இன்று தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.