உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கஞ்சா பதுக்கியவர் கைது

 கஞ்சா பதுக்கியவர் கைது

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன்கோவில் மலை பகுதியில், கடலுார், வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேரகிருஷ்ணன்,23;கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார். நடுவீரப்பட்டு போலீசார் குபேரகிருஷ்ணனை கைது செய்து,அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை