அரசுப்பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கடலுா ர் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவராஜ் வரவேற்றார். பாலசுப்பிரமணியன், மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா, மாநில பொருளாளர் சரவணன், முன்னாள் மாநில பொதுசெயலாளர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.