குட்கா விற்றவர் கைது
புவனகிரி : புவனகிரி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி, வாழைக்கொல்லை காலனியில் உள்ள பெட்டிக்கடையில் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அதேப்பகுதியைச் சேர்ந்த வெற்றிச்செல்வன்,24; தனது பெட்டக்கடையில் குட்கா பாக்கெட்டுகளை மறைத்துவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.உடன் அவரை கைது செய்து 300 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.