தி.மு.க., மாணவரணி பதவிகளுக்கு கடலுாரில் 22ல் நேர்காணல்
கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு நேர்காணல் கடலுாரில் வரும் 22ம் தேதி நடக்கிறது.இது குறித்து கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவரணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல், வரும் 22ம் தேதி, காலை 10.00 மணிக்கு, கடலுார் தி.மு.க., அலுவலகத்தில் நடக்கிறது.மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., நேர்காணலை நடத்த உள்ளார், உடன் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, மாணவரணி இணை செயலாளர் மோகன், மாணவரணி துணை செயலாளர் ஆனந்த் பங்கேற்கின்றனர். எனவே, மாணவரணி பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் உரிய ஆவனங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் சம்பந்தப்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் விண்ணப்பம் செய்தவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்து, தாங்களும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.