உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்டர் மீடியனில் மோதி ஐ.டி., ஊழியர் பலி

சென்டர் மீடியனில் மோதி ஐ.டி., ஊழியர் பலி

கடலுார்; கடலுார் அருகே பைக்கில் சென்ற ஐ.டி., கம்பெனி ஊழியர், சென்டர் மீடியனில் மோதி இறந்தார். கடலுார் அடுத்த வி.காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் தினேஷ்குமார்,22; ஐ.டி., கம்பெனி ஊழியர். இவர் தனது மாமா வீடான அன்னவல்லி சென்று விட்டு பைக்கில் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அன்னவல்லி மேம்பாலம் அருகில் வந்த போது, சென்டர் மீடியனில் மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ