மேலும் செய்திகள்
மது பாட்டில் கடத்தியவர் கைது
02-Oct-2024
குள்ளஞ்சாவடி: புதுச்சேரி மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை சமட்டிக்குப்பம் ஏரிக்கரை அருகே ரோந்து சென்றனர். அங்கு பைக்குடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை சோதனை செய்தனர். அதில் அவர், புதுச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.விசாரணையில், சமட்டிக்குப்பம், கிழக்கு தெருவைச் சேர்ந்த, ஜெயசங்கர், 30; என்பதும் விற்பனைக்காக மது பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. உடன், அவரது பைக் மற்றும் 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து ஜெயசங்கரை கைது செய்தனர்.
02-Oct-2024