கிருஷ்ண ஜெயந்தி
சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெருமாள், கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் உரி அடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.