கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி 100 சதவீத தேர்ச்சி
கடலுார்: கடலுார் குமராபுரம் கிருஷ்ணசாமி வித்யாநிகேதன் சி.பி.எஸ்.இ., பள்ளி, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில் கிஷோர்ஆனந்த், ஹைபா, மதுலேகா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பத்தாம் வகுப்பு தேர்வில் முகமது தாரிக் ராஜா, சம்யுக்தா நிலானி, சக்திதரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். சாதனை மாணவியரை, பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் முதன்மை நிர்வாக இயக்குனர் டாக்டர் கண்ணன், நிர்வாக இயக்குனர் சிரிஷா கண்ணன், முதல்வர் பத்மஸ்ரீ ராஜகோபாலன், ஒருங்கிணைப்பாளர் ரொமிலா வின்சென்ட் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான கல்வி கட்டண சலுகைகளை டாக்டர் ராஜேந்திரன் அறிவித்தார். அதன்படி 490க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது, 475 முதல் 489 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 80சதவீத கல்வி கட்டண சலுகை, 450 முதல் 474 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 60சதவீத கட்டண சலுகையும், 425 முதல் 449 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 40சதவீத சலுகையும், 400 முதல் 424 வரை 20சதவீத சலுகையும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.மேலும், இப்பள்ளி அரசு தேர்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதுடன் கல்விப்பணியில் மகத்தான சேவையை செய்து வருவதாக பள்ளி தாளாளர் தெரிவித்தார்.