உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு

விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு

விருத்தாசலம் : விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகையொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் மற்றும் குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை வெள்ளிக்கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார். கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை