உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்டல அளவிலான கோ-கோ போட்டி கூடுவெளி கல்லுாரி இரண்டாம் இடம்

மண்டல அளவிலான கோ-கோ போட்டி கூடுவெளி கல்லுாரி இரண்டாம் இடம்

சிதம்பரம்: நாகை மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான கோ-கோ போட்டியில் கூடுவெளி பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான, ஆண்களுக்கான கோ-கோ போட்டி, மயிலாடுதுறை மாவட்டம் கொல்லுமாங்குடி, ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. கடந்த 4 ம் தேதி நடந்த இப்போட்டியில், அதில், சிதம்பரம் அடுத்துள்ள கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் குழுவினர் பங்கேற்று விளையாடினர், இதில், இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர் குழுவினரை கல்லுாரி முதல்வர் மேரி கிறிஸ்டினா உடற்கல்வி இயக்குனர் முருகேசன் மற்றும் துறை தலைவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !