உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 41 அடி உயர மகா காளியம்மனுக்கு கும்பாபிேஷகம்

41 அடி உயர மகா காளியம்மனுக்கு கும்பாபிேஷகம்

விருத்தாசலம்: விஜயமாநகரத்தில் 41 அடி உயர மகா காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் வெகு விமர்சையாக நடந்தது.மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம், புதுவிளாங்குளம் கிராமத்தில், 41 அடி உயர மகா காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜைகள் துவங்கியது.தொடர்ந்து, நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மகா பூர்ணாஹூதி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தன. 9:30 மணிக்கு மேல், கடம் புறப்பாடு நடந்தது. சுந்தரமுருகன் குருக்கள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் 41 அடி உயர மகா காளியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிேஷகம் செய்தனர். பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை