உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மோதி விபத்து கூலித்தொழிலாளி பலி

பைக் மோதி விபத்து கூலித்தொழிலாளி பலி

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் சாலை விபத்தில் இறந்த கூலித்தொழிலாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்தவர் மாயவன், 74. இழைப்பு பட்டறை கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் பெண்ணாடம், மேற்கு மெயின்ரோடில் சாலையோரம் நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியே வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை