மேலும் செய்திகள்
இறந்த நபர் குறித்து விசாரணை
02-Jun-2025
கடலுார்: கடலுார் அருகே ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த சின்ன கங்கணாங்குப்பத்தில் தனியார் பேட்டரி கடை முன்பு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலின் அருகே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. தகவலின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியிவல்லை. இதுகுறித்து சின்ன கங்கணாங்குப்பம் வி.ஏ.ஓ., முகமது உசேன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
02-Jun-2025