மேலும் செய்திகள்
வழக்கு சமரச விழிப்புணர்வு பேரணி
10-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், மாவட்ட நீதிமன்ற சமரச மையம் சார்பில், சமரச தீர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் தமிழரசி முன்னிலை வகித்தார்.சமரச மைய உறுப்பினர் வழக்கறிஞர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையத்தின் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினார்.உதவி பேராசிரியர் வில்விஜயன், பேராசிரியர்கள் தமிழ்வேல், லலிதா, ஆனந்த் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
10-Apr-2025