உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

சேத்தியாத்தோப்பு : பூதங்குடி ராஜசக்தி மகா மாரியம்மன் கோவிலில் 21ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ராஜசக்தி மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மாத விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, வீராணம் ஏரிக்கரையில் இருந்து பறவை காவடி, அரிகண்ட காவடி, பால்குட ஊர்வலம் நடந்தது. மதியம் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ