உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மோட்டார் ஒயர் திருடியவர் கைது

மோட்டார் ஒயர் திருடியவர் கைது

கடலுார்: கடலுார் அருகே மோட்டார் ஒயரை திருடியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கடலுார் அடுத்த கண்டக்காட்டைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,54. அதே கிராமத்தில் உள்ள அவருக்குச்சொந்தமான வயலில் உள்ள மோட்டார் கொட்டகையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு வாலிபர் ஒருவர் மோட்டார் ஒயரை திருடிக்கொண்டிருந்தார். ரவிச்சந்திரன் மற்றும் அருகில் இருந்தவர்கள்அந்த வாலிபரை பிடித்து தேவனாம்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம், மதியனுாரைச் சேர்ந்த சிவக்குமார்,23, என்பதும், ஒருவருடமாக குண்டு உப்பலவாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம்போலீசார் வழக்குப்பதிந்து, சிவக்குமாரை கைது செய்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி