உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் வெறிச்

அமாவாசை எதிரொலி : மீன் மார்க்கெட் வெறிச்

கடலுார்: கடலுார் மீன்பிடி துறைமுகம் மகாளய அமாவாசையையொட்டி வெறிச்சோடி காணப்பட்டது. புரட்டாசி மாதம் முழுதும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் குடும்பத்தில் உள்ளவர்கள் மாதம் முழுதும் அசைவ உணவை தவிர்த்து பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாதம் பிறந்து 4 நாட்கள் ஆன நிலையில், பொதுமக்கள் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க துவங்கியுள்ளனர். புரட்டாசி மாதம் மற் றும் மகாளய அமாவாசை யையொட்டி நேற்று மீன்கள் வாங்க பெரும்பாலானோர் வராததால் கடலுார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி