உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாதாள காளி கோவிலில் நிகும்பலா யாகம் 

பாதாள காளி கோவிலில் நிகும்பலா யாகம் 

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு பாதாள காளி கோவிலில் பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது. நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாள காளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகம் துவங்கியது. 2:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது. பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை