உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு

கடலுார் : குருத்தோலை ஞாயிறு நாளான நேற்று, கடலுாரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் முன்பு இருக்கும் நாட்கள் தவக்காலமாக கருதப்படுவது வழக்கம். தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி, கடலுாரில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு கடைபிடித்தனர். கடலுார் பீச் ரோடு புனித கார்மேல் அன்னை தேவாலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் சென்றனர்.இதைத்தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாரதிசாலை ஆற்காடு லுாத்தரன் திருச்சபை, மஞ்சக்குப்பம் துாய எபிபெனி தேவாலயம், முதுநகர் கிறிஸ்து நாதர் தேவாலயம், சொரக்கல்பட்டு துாய யோவான் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ