முதியவர் மீது போக்சோ வழக்கு
கடலுார்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் முத்துலிங்கம்,77; இவர், 5ம் வகுப்பு பயிலும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து முத்துலிங்கத்தை தேடி வருகின்றனர்.