மேலும் செய்திகள்
சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'
26-Apr-2025
கடலுார் : சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார் அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர் குரு,26; இவர், 17வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாகக்கூறி, கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். பின் சிறுமியை திருப்பூர் அழைத்துச்சென்று திருமணம் செய்து கொண்டார்.சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கடலுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து குரு மற்றும் அவரது பெற்றோர் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
26-Apr-2025