உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகளுடன் தாய் மாயம் போலீசார் விசாரணை

குழந்தைகளுடன் தாய் மாயம் போலீசார் விசாரணை

கடலுார் : கடலுாரில் இரண்டு குழந்தைகளுடன் தாய் காணாமல் போனது குறித்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார், சுத்துக்குளம், பீமாராவ் நகரைச் சேர்ந்தவர் குமார் மனைவி ஷேமளா, 27; இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு வாரத்திற்கு முன் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷேமளா, கணவரைப் பிரிந்து அதே பகுதியிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்றார். நேற்றுமுன்தினம் காலை குழந்தைகளுடன் துணிக்கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ