கடலுாரில் 20ம் தேதி அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்
கடலுார்; கடலுாரில் அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு; அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம் வரும் 20ம் தேதி காலை 11:00 மணியளவில், கடலுார் வண்ணாரப்பாளையம் கடற்கரை சாலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும்.இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை, அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் 607001 என்ற முகவரிக்கு நாளைக்குள் (18ம் தேதி கிடைக்குமாறு) எழுதி அனுப்பவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.