மாணவிகளுக்கு பாராட்டு
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவிகள் கணினி பாட டிப்ளமோ தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவிகள் 8ம் வகுப்பு தர்ஷினி, 9ம் வகுப்பு பாத்திமா ரினிஷா. 10ம் வகுப்பு ஓவியபாரதி ஆகியோர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட கணினி பாட டிப்ளமோ தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவிகளை பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா, கணினி ஆசிரியை மாதவி ஆகியோர் உடனிருந்தனர்.