உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கல்

கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் உட்பட 32 வகையான போட்டிகள் நடத்தி, வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கல்லுாரி வளாகத்தில் நேற்று கலைத்திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் சுந்தரசெல்வன் வரவேற்றார். பேராசிரியர் ெஹலன் ரூத் ஜாய்ஸ் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் சுரேஷ்குமார், தமிழரசி வாழ்த்தி பேசினர். அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை