உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்

ஓய்வுபெற்ற போலீசாருக்கு நல உதவிகள் வழங்கல்

கடலுார்; தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர்கள் நல சங்கத்தின் சார்பில், புத்தாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மூத்த வழக்கறிஞர் சிவமணி தலைமை தாங்கி, ஓய்வு பெற்ற போலீசாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற காவலர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் விநாயகம், மாவட்ட செயலாளர் சிங்காரவேல், பொருளாளர் மணி வாழ்த்துரை வழங்கினர். செல்வம், குமாஸ்தா பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். துரைசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி