பயணிகள் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை
புதுச்சத்திரம்: பழுதடைந்துள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேட்டில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்த இங்கு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடை தற்போது பழுதடைந்து, பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் நிழற்குடையின் எதிரில் கல் அடுக்கி வைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந் த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க, சம்மந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.