சாலை பணி துவக்கி வைப்பு
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம்-கீழக்குப்பம் இடையிலான புதிய தார் சாலை பணிக்கு பூமி பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பம்-கீழக்குப்பம் வரை தமிழக முதல்வரின் கிராம சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 58 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ., மீரா கோமதி, தி.மு.க., கிளை செயலாளர் கணேசன், மூர்த்தி, வீரமுத்து, சுரேஷ், மச்சக்கந்தன், சுரேஷ், அருள்ராஜ், அமிர்தலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.