உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடத்தில் சாலை பணி துவக்கம்

பெண்ணாடத்தில் சாலை பணி துவக்கம்

பெண்ணாடம் : 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக கிடப்பில் போடப்பட்ட சுமைதாங்கி - வெண்கரும்பூர் தார்சாலை பணி துவங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பெண்ணாடம், சுமைதாங்கி பஸ் நிறுத்தத்தில் இருந்து அரியராவி, ஓ.கீரனுார், பெ.பூவனுார் வழியாக வெண்கரும்பூர் செல்லும் தார்சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதி கிராம மக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை பராமரிப்பின்றி ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. 3 மாதங்களுக்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லி கொட்டி நிரப்பப்பட்டது. ஆனால், இதுவரை பணியை துவங்காததால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், இருசக்கர வாகனங்கள் பஞ்சராவதுடன், சிறு ஜல்லிகளால் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர்.இதனை சுட்டிக்காட்டி, தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து தார்சாலை போடும் பணி துவங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை