உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது; பயணிகள் அலறியடித்து ஒட்டம்

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது; பயணிகள் அலறியடித்து ஒட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலைய கட்டட மேற்கூறையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயமடைந்தார். பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சிதம்பரம், பஸ் நிலைய கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விழுந்து வருகிறது. அந்த வகையில் நேற்று சேலம் பஸ் நிற்கும் பகுதியில், நடைபாதை பகுதி மேற்கூரையின் சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவரின் தலை மற்றும் அருகில் உள்ள கடையின் பொருட்களில் மீது விழுந்தது. அப்போது, அருகில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சிமெண்ட் காரை விழுந்ததில் தலையில் காயமடைந்த நபரை, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதிஷ்டவசமாக பெரிய அளவிலான பாதிப்பு இல்லாததால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Sasikumar Yadhav
அக் 17, 2024 07:11

திருட்டு திராவிட களவானிங்க ஆட்சியில் ஆட்டய போட்டது போக மீதி பணத்தில் கட்டிய கட்டிடமாக இருக்கும்


அப்பாவி
அக் 16, 2024 16:45

என்ன? ஒரு மூட்டை சிமிட்டிக்கு 30 மூட்டை மணல் கலந்து கட்டியிருப்பாங்களோ?


அப்பாவி
அக் 16, 2024 16:44

தத்திகள். சித்தாள் வேலைக்குக் கூட லாயக்கில்லாதவர்கள் கட்டுன கட்டிடங்கள். அதை இப்போ மெயிண்டெயின் பண்றவங்க அதை விட மோசம்.


சமீபத்திய செய்தி