உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

கடலுார்; நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெய்வேலி, வட்டம் 2ஐச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7ம் தேதி வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருடு போன பொருட்கள் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை