உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

 மொபட்டில் மணல் கடத்தியவர் கைது

விருத்தாசலம்: மொபட்டில் மணல் கடத்திய மூவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றபோது, பரவளூர் மணிமுக்தாற்றில் இருந்து மொபட்டில், சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவர், பரவளூர் பாலகிருஷ்ணன் மகன் ஆறுமுகம், 34, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 5 சாக்கு மூட்டைகளில் இருந்த மணலை மொபட்டுடன் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ