மணல் கடத்தல்: இருவர் கைது
விருத்தாசலம்: கம்மாபுரம் அருகே மொபட்டில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது, கோ.ஆதனுாரில் மொபட்டுகளில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ராஜா, 25, ராஜகுரு, 19, என்பதும், மொபட்டுகளில் 6 மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, மொபட் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.