மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
26-Apr-2025
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.சனி பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் காலையில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மலர் மற்றும் அருகம்புல் மாலை, வில்வ மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
26-Apr-2025