சித்தாந்த சைவநெறி மன்ற ஆண்டு விழா
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சித்தாந்த சைவநெறி மன்றம் சார்பில் 26ம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஜெகநாதன் முன்னிலை வகித்தார். தங்கமணி திருமுறை விண்ணப்பம் வாசித்தார். ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். பூங்குழலி பெருமாள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது, பன்னீர்செல்வம், முத்துக்குமார், ஜெயந்த சச்சிதானந்தம், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேவசேனா நன்றி கூறினார்.