அனுமதியின்றி வைத்த சிலை பறிமுதல்
புதுச்சத்திரம்: கடலுார் அடுத்த ஆண்டார்முள்ளிப் பள்ளம் செல்லியம்மன் கோவில் வளாகத்தில் அம்பேத்கர் சிலை இருந்தது. இது கடந்த 2011 ம் ஆண்டு வீசிய 'தானே' புயலின் போது, உடைந்து சேதமடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய இடத்திலேயே, அப்பகுதி மக்கள் 6 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலையை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி.,ரகுபதி, டி.எஸ்.பி., விஜயகுமார், தாசில்தார் மகேஷ், துணை தாசில்தார் துரைராஜ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிலை அனுமதியின்றி வைத்ததாக கூறி அகற்றினர்.