உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர்கள் 40 யூனிட் ரத்ததானம்

கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மாணவர்கள் 40 யூனிட் ரத்ததானம்

விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் வளர்மதி தலைமை தாங்கினார். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி, நகராட்சி கவுன்சிலர் கருணா முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் மானவ் ஆகியோர் ரத்ததான முகாமை துவக்கி வைத்தனர்.இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முகாமில், விருத்தாசலம் ரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் குலோத்துங்கசோழன் தலைமையில், செவிலியர்கள் ஜெயந்தி, இந்துமதி, செல்லக்கிளி, ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் கீதா, ஆலோசகர் குமார், ஹரிபாஸ்கர், சங்குபாலன் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.மாணவர்களிடமிருந்து 40 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. ரத்தானம் வழங்கிய மாணவர்களுக்கு, விருத்தாசலம் ஜெயின் ஜூவல்லரி சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை