மாணவர்கள் களப்பணி
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காவல் படை துவங்கப்பட்டு, அந்த மாணவர்கள் நேற்று நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் களப்பணி மேற்கொண்டனர்.மாணவர்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படும் ஆவணங்கள் பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, காவல்படை ஒருங்கிணைப்பாளர் கமலகந்தன், ஆசிரியர் சூசை, ஜெயகாந்தன் உடனிருந்தனர்.