உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு

சாலையில் திடீர் பள்ளம்: திட்டக்குடியில் பரபரப்பு

திட்டக்குடி : திட்டக்குடி அருகே சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி - வையங்குடி சாலையில் ஏராளமான பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இச்சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில் பெய்த கனமழை காரணமாக கொட்டாரம் - வையங்குடி இடையே சாலையின் நடுவில் 3 ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ