உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தளவாட பொருள் பள்ளிக்கு வழங்கல்

தளவாட பொருள் பள்ளிக்கு வழங்கல்

விருத்தாசலம் விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், நல்லாசிரியர் விருது மற்றும் பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுனர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார். முன்னாள் துணை ஆளுனர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணசாமி வாழ்த்திப் பேசினார். அதன்பின், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பொற்செல்விக்கு, ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. சங்க நிர்வாகி சுவாமிநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ