டாஸ்மாக் சரக்கு விற்றவர் கைது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே டாஸ்மாக் சரக்கை, கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, டாஸ்மாக் சரக்கை கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்த அரியகோஷ்டி வடக்கு கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்த கோவிந்தசாமியை, 42; கைது செய்தனர்.