மேலும் செய்திகள்
மது பாட்டில்கள் விற்றவர் கைது
03-Sep-2024
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே டாஸ்மாக் சரக்கை, கள்ளத்தனமாக விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, டாஸ்மாக் சரக்கு கள்ளத்தனமாக விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்லப்பனை, 53; கைது செய்து, அவர் மீது வழக்கு பதிந்தனர்.
03-Sep-2024