மேலும் செய்திகள்
குட்கா விற்ற இருவர் கைது
21-May-2025
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ஆயியார் மடம் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பழமலைநாதர் நகரைச் சேர்ந்த சரவணன், 55; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21-May-2025