சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது
விருத்தாசலம் : பத்தாம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.அரியலுார் மாவட்டம், உடையாளர்பாளையம் அடுத்த பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் அருள்குமார் என்கிற விஷால். இவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் தாய் புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.