உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை

பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமணன், 24; கூலித் தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரமணன், கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார்.இதுகுறித்த புகாரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை