உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோவில் கோபுர கட்டுமான பணி துவக்கம்

 கோவில் கோபுர கட்டுமான பணி துவக்கம்

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே கோவில் கோபுர கட்டுமான பணி துவங்கியது. பொயனப்பாடியில் ஆண்டவர் செல்லியம்மன் கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன், கோவில் புனரமைப்பு பணி முடிந்து மகா கும் பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், மழையில் கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது. இதைக்கட்டித்தர தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர். அவர் கட்டுமானப் பணிகளை பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார். அப்போது, ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, ஜெய � , ம.தி.மு.க., மங்களூர் ஒன்றிய செயலர் சம்பத்குமார், மங்களூர் முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல்குமார், வெங்கடேசன், ஜெயராமன், நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை